Skip to content

NMD Saleem Posts

வலி !

“காதலியிடம் காதலை சொல்லிவிட்டு

அவள் பதிலை எதிர்நோக்கி

காத்திருக்கும் வலி தான்

கொடியது ” என்று

சொல்லுபவனை ,

தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துவிட்ட
 
அம்மாவின் நிலை அறிய 
 
மருத்துவரை  எதிர்நோக்கி 
 
காத்திருக்கும் என்னை வந்து 
 
பார்க்க சொல். அவன் 
 
சொன்னது  தவறென்று 
 
புரிந்துகொள்வான் ! 
Leave a Comment

எனது மனநல காப்பகம் !

விதிமுறைகளை பின்பற்றும்

நான் ஒரு

பைத்தியக்காரன் என்றால்,

இவ்வுலகமே எனது

மனநல காப்பகம் !

விதிமுறைகளை பின்பற்ற மறுக்கும்

அறிவாளிகள் (அதிசய பிராணிகள் )

வேறு கிரகம்

தேடி போகட்டுமே !

Leave a Comment

பிழையா இல்லை பாவமா ??

 

சொல்ல முடிந்தும் சொல்லாமல்,
சொப்பணத்தில் மட்டும் உன்னை சொந்தம் கொண்டாடி…
சொர்க்கம் இதுவோ ? இல்லை வாழ்வின்
நரகம் இதுவோ ? என்று
என்னை நானே வினவி,
விடை தேடி நானும்…..
நடையும் தெரியாமல்
நிலையும் புரியாமல்
உணவிருந்தும் பட்டினியாய்
உடையிருந்தும் கந்தையுடன்
கடல் இனிக்கும் வெயில் குளிரும்
என்று இயற்கைக்கு முரணாய்
எதிர் பார்ப்பதுபோல்
உனக்கு முரணாய் நான் உன்
காதலனாக எண்ணுவது
பிழையா இல்லை பாவமா ??
Leave a Comment

உன்னாலே உன்னாலே !

உன்
சுட்டு விழி பார்வையிலே
சோகம் சுகமாகிறது !
சொக்கும் சிரிப்பாலே
சொர்க்கம் வீடாகிறது !
நடக்கும் நடையிலே
உலகம் தள்ளாடும்,
சிந்தும் முத்தத்தில்
சிந்தை சீராகும்;
சிகரம் போலே
இன்பம் மேலோங்கும்
ஆம்!
வள்ளுவன் சொன்னது
உண்மையடி …..
உன் சொல் கேளாதவர் …
வாழ்ந்தென்ன வளர்ந்தென்ன …

Leave a Comment

நான் நேசித்த முதல் பெண் !

சொற்கள் தேவையில்லை ,
என் சொர்க்கமே உனை பாட…
சந்தர்ப்பம் தேவையில்லை ,
என் சொந்தமே உனை நாட …
கண்கள்
தேவையில்லை ,
என் கனவே உன்னை பிடிக்க…
செம்மொழி
தேவையில்லை ,
என் உயிரே உன்னை படிக்க ….
ஊடகம்
தேவையில்லை ,
என் அழகே உன்னை வடிக்க …
தலை சாய்க்க, இவ்வுலகம் ஏங்குமடி
உன் மடி கிடைக்க …..
நான் நேசித்த முதல் பெண் !
என் அம்மா……

Leave a Comment

தனித்துவம் …


எப்படி சொல்வேன் பெண்ணே ?
கண்ணாடியை பார் என் காதலி யின்
முகம் தெரியுமென்று …..

எப்படி சொல்வேன் பெண்ணே ?
என்னிடம்,” யார் அவள் ?” என்று கேட்கும் குரல்
அவளுடையதென்று ….

எப்படி சொல்வேன் பெண்ணே ?
என் கவிதைகளுக்கும் காதலுக்கும் காரணம்
நிழல் உருவம் அன்று ….
நீ அதன் நிஜ உருவமென்று ……

எப்படி சொல்வேன் பெண்ணே ?
எப்படி சொல்வேன் …..
உன் புன்னகையை இழக்க மனமின்றி
என் காதலை மறைகின்றேன் ….

தோல்வியையும் ரசித்து ருசிக்க வைப்பது….
காதலுக்கே உள்ள தனித்துவம் …

Leave a Comment

வெறுப்பு !

உன்னை காதலித்த நாள் முதல்
என்னை நானே வெறுக்கிறேன் !

ஆம்
உனக்கு பிடிக்காதவை
எனக்கு மட்டும் எப்படி
பிடிக்கும் ?

Leave a Comment

The Pain of LOVE…………….

I Never thought this day would come in my life.
Today, i feel like the whole world seems to be resting on my shoulders.
I am no Hercules. but i am stronger than him as i am holding LOVE on my shoulders.
May be its the pain with heart that makes you feel than the body.
i don’t know why this day has come. i don’t know whats going to happen …
how long will i wait ? should i wait? can i wait?
my love, an unbaked mud pot now.
The pain of love
i have filled it with water……..now its time for the pot to react.
Though i am aware that this wont help too long , still i like to check its strength.
what will she think if i reveal my love to her ?
May be i might move out of her life or might be part of it……
if she dint feel the same way as i do, then who am i?
innocent ? unlucky? criminal? poor? cheat? ?????
“No one would have felt so bad in love ”  hope i cant make this statement now,,,
she would never like me proposing her
i can never give up talking to her…
when i propose her ….dont know what will happen? May be all the beautiful days i spent with her, may become a dream
or
every single day i am gonna spend, is going to bloommmmmmmm.

Schooling …..college …first JOB Interview…………..things which has always given me fruits……
My Love …………. ?????
May be do i have to live my rest of life with guilt?
or trying it once… is it OK ?
Nothing wrong in asking her but she wont take it easy even if her parents allows her to think on it.
Lots and lots running on my head …don’t know how to start, how to react?
The day i saw her in blue dress….awesome and the look i had from the her …..Mesmerizing….
never can i forget….

whatever happens i will have to accept …..life has to go on….
i don’t like things being chosen by me…but not in all cases.
This time i feel she s the right pick…..my kind of a girl….
once love comes in…see i am writing some non-sense….all these crap happens.
Her voice is my tonic…can easily find her mood while talking to her……..
i am really dumb struck………don’t know what to do?
May be, time will be the best medicine……
i am leaving this for the day.

– A page from his diary.

Leave a Comment

வழியின்றி துடிகின்றேன் !!


இடைவெளி விட்டு நடக்கின்றேன்,
உன் இமைகளில் மையாய் இருக்கின்றேன் !
சொல்ல வந்ததை மறக்கின்றேன்,
நீ சொல்வதை கேட்டு மகிழ்கின்றேன் !
சிரித்து மறைக்கவே நினைக்கின்றேன்,
நீ சிரிப்பதை கண்டு திளைகின்றேன்!
சொல்ல வந்ததை மறைகின்றேன்
சொல் சொல்லாய்  இல்லையே !   வெறுகின்றேன் ..
பார்த்து பழகிய நாட்களெல்லாம்  கனவாகுமோ என்று அழுகின்றேன்;
இதை சொல்லும் நொடிக்காக தவிக்கின்றேன் ,
சொன்னபின் …
முடிவு  எதுவாயினும் ; ஏற்கின்றேன் !!
சுகமான ஒன்று தான் காதலென்றால்
நீ அறையும் அடி  கூட சுகம்தானே !
முடிவு  எதுவாயினும்  ஏற்கின்றேன்,
அது அடியானால் ……வலி நானாகிறேன்…

Leave a Comment

அதிகம்.!….?#$%^$#??!


ருசிக்க படாத பாலுக்கு சுவை அதிகம்
கேட்க படாத பாடலுக்கு இனிமை அதிகம்
ஆளபடாத பொருளுக்கு விலை அதிகம்
சொல்ல படாத காதலுக்கு
வலி அதிகம்…..

Leave a Comment

இருமை

பகல் – இரவு

வெயில் – நிழல்

நன்மை – தீமை

அகம் – புறம்

இன்பம் – துன்பம்

இப்படி உலகமே

இருமையில்

இயங்க  …

என் வாழ்வும்

அப்படியே…

காதலி – மனைவி  !

1 Comment

ஒப்பிடுதல் ..

  காதலை நிலவுடன் ஒப்பிடாதே ,

ஒரு திங்கள் அமாவாசை வரும்

காதலை மலருடன்  ஒப்பிடாதே ,

மாலையில் அது வாடி போகும்

காதலை உலகுடன் ஒப்பிடாதே ,

ஒரு நாள் இது அழிய கூடும்

உன் காதலை

வாய்மையுடன் ஒப்பிடு

உண்மையான காதலை

தாய்மையுடன் ஒப்பிடு

காதலரே உன் காதலை

காதலுடன் ஒப்பிடு….

Leave a Comment

இ(ரு)வரும் தான் !!

வளைக்கும் தெம்பை கொடுத்து

கரங்களை எடுத்து கொள்வதும் ,

நுகர்ந்திட மணத்தை  கொடுத்து

மூக்கினை முடக்கிகொள்வதும் ,

உழைக்கும் திடத்தினை கொடுத்து

உயிரினை உருவிகொள்வதுமாய்

நம்மை சோதிப்பது

கடவுள் மட்டும் அல்ல ,

காதலியும் தான்…..!

Leave a Comment

அளவுகோல் !

 உன்னை கவிதை நூலாக்க

என் கரங்கள் தாளும்

ஆனால்

காகிதம் தந்து மரங்கள் தாளாது !

உன்னை இசையாய் பாட

என் இதழ்கள் தாளும்

ஆனால்

ராகங்கள் தந்து ஏழு ஸ்வரங்கள் தாளாது !

பெண்ணே ! உன்னை பாராட்டி

உவமைகள் சொல்ல

என் இதயம் தாளும்

ஆனால்

வடிவங்கள் தந்து என் கற்பனை தாளது !

மனமின்றி முடிக்கிறேன்

எஞ்சிய நினைவுகளோடு !

2 Comments

குழி !!??!!

தெரிந்தே விழுந்தாலும் புதைகுழியில் ….

போராட்டம் : அரை மணி நேரம்

விளைவு : மரணம் ஒரு முறை மட்டுமே !!

ஆனால்

தெரியாமல் விழுந்த அவளது கன்ன‌க்குழி ‍‍….‍‍‍‍‍யால்

போராட்டம் : ஆயுட்காலம்

விளைவு : மரணம்…… நொடிக்கு ஒரு முறை !

2 Comments

Valid Reason!

Nature’s mist

fulfills your thirst

Eagle’s nest

is more than Best

All the wonderful Luck

just from her pretty Look

Day was darker than Night

until she came at your sight

Your credentials became valid

reason is HER ! solid!

Are you searching for a reason ?

To fall with her ?

in love………

Leave a Comment