Skip to content

Month: July 2011

இருமை

பகல் – இரவு

வெயில் – நிழல்

நன்மை – தீமை

அகம் – புறம்

இன்பம் – துன்பம்

இப்படி உலகமே

இருமையில்

இயங்க  …

என் வாழ்வும்

அப்படியே…

காதலி – மனைவி  !

1 Comment

ஒப்பிடுதல் ..

  காதலை நிலவுடன் ஒப்பிடாதே ,

ஒரு திங்கள் அமாவாசை வரும்

காதலை மலருடன்  ஒப்பிடாதே ,

மாலையில் அது வாடி போகும்

காதலை உலகுடன் ஒப்பிடாதே ,

ஒரு நாள் இது அழிய கூடும்

உன் காதலை

வாய்மையுடன் ஒப்பிடு

உண்மையான காதலை

தாய்மையுடன் ஒப்பிடு

காதலரே உன் காதலை

காதலுடன் ஒப்பிடு….

Leave a Comment

இ(ரு)வரும் தான் !!

வளைக்கும் தெம்பை கொடுத்து

கரங்களை எடுத்து கொள்வதும் ,

நுகர்ந்திட மணத்தை  கொடுத்து

மூக்கினை முடக்கிகொள்வதும் ,

உழைக்கும் திடத்தினை கொடுத்து

உயிரினை உருவிகொள்வதுமாய்

நம்மை சோதிப்பது

கடவுள் மட்டும் அல்ல ,

காதலியும் தான்…..!

Leave a Comment

அளவுகோல் !

 உன்னை கவிதை நூலாக்க

என் கரங்கள் தாளும்

ஆனால்

காகிதம் தந்து மரங்கள் தாளாது !

உன்னை இசையாய் பாட

என் இதழ்கள் தாளும்

ஆனால்

ராகங்கள் தந்து ஏழு ஸ்வரங்கள் தாளாது !

பெண்ணே ! உன்னை பாராட்டி

உவமைகள் சொல்ல

என் இதயம் தாளும்

ஆனால்

வடிவங்கள் தந்து என் கற்பனை தாளது !

மனமின்றி முடிக்கிறேன்

எஞ்சிய நினைவுகளோடு !

2 Comments