எனது வாழ்வில் பெரிய திருப்பம்
எனது நூறாவது கவிதை;
வந்துவிட்டது
புத்தகத்தில் அல்ல !!
அஞ்சலில்
திரும்பி…………
:(
1 Commentஎனது வாழ்வில் பெரிய திருப்பம்
எனது நூறாவது கவிதை;
வந்துவிட்டது
புத்தகத்தில் அல்ல !!
அஞ்சலில்
திரும்பி…………
:(
1 Commentஇவ்வுலகில் பிறந்தேன்
உடல் வளர்ந்தது
படித்தேன்
அறிவு வளர்ந்தது
நட்பினை கூட்டினேன்
வலிமை வளர்ந்தது
காதல் செய்தேன்
கவிதை வளர்ந்தது
கூடவே
இலவச இணைப்பாய்
தாடியும்
வளர்ந்தது !!
1 Commentவெறும் பாறையா இருந்த என்ன
கரிசல் மண்ணாக்கிபுட்ட
கரும்பு உன் சிரிப்பால்
சக்கரைய தூவிபுட்ட
நான் நட்ட செடியெல்லாம்
உன்ன கண்டு பூக்குதடி
நம்ப முடியல நீ வந்த நொடிய….
என் மனச மயக்க வந்த கிளியே !
போதுமடி பெண்ணே!
நீ பார்த்த பார்வ
என் பூமி ஆகும்
பொன்னே பசும் பொன்னே !
4 Commentsமுல்லைக்கு தேர் கொடுத்த பாரியை விட
அவ்வைக்கு கனி கொடுத்த அதியனை விட
புறாவுக்கு சதை கொடுத்த சிபியை விட
என் உடலுக்கு உயிர் கொடுத்த
உன் கண்ணசைவு வாழ்க !
பெண் வள்ளலே !
எனக்கு கொடுப்பாயா
உன் இதயத்தை ??
3 Commentsகண்ணும் இமையும் போல,
வானமும் நிலவும் போல,
பாட்டும் இசையும் போல,
காற்றும் சாரலும் போல,
பூவும் நாரும் போல,
இந்நிலையில் இருக்கும் இவை அனைத்தும்
உங்களுக்கு ஈடோ ?
மரணம் கூட
உங்கள் உயிரை தான் பிரிக்க முடியும் ….
உங்கள் நட்பை அல்ல !!!!
Leave a Commentபூமியை கடலாகவும் கண்டங்களாகவும்
பிரித்தவன் இறைவன் !
இறைவனை ஜாதிகளாலும் மதங்களாலும்
பிரித்தவன் மனிதன் !
இப்பொழுது சொல்லுங்கள்
யார் பெரியவன்
மனிதனா ? இல்லை கடவுளா ?
1 Comment