உன்
சுட்டு விழி பார்வையிலே
சோகம் சுகமாகிறது !
சொக்கும் சிரிப்பாலே
சொர்க்கம் வீடாகிறது !
நடக்கும் நடையிலே
உலகம் தள்ளாடும்,
சிந்தும் முத்தத்தில்
சிந்தை சீராகும்;
சிகரம் போலே
இன்பம் மேலோங்கும்
ஆம்!
வள்ளுவன் சொன்னது
உண்மையடி …..
உன் சொல் கேளாதவர் …
வாழ்ந்தென்ன வளர்ந்தென்ன …

Be First to Comment