Skip to content

Month: May 2012

பிழையா இல்லை பாவமா ??

 

சொல்ல முடிந்தும் சொல்லாமல்,
சொப்பணத்தில் மட்டும் உன்னை சொந்தம் கொண்டாடி…
சொர்க்கம் இதுவோ ? இல்லை வாழ்வின்
நரகம் இதுவோ ? என்று
என்னை நானே வினவி,
விடை தேடி நானும்…..
நடையும் தெரியாமல்
நிலையும் புரியாமல்
உணவிருந்தும் பட்டினியாய்
உடையிருந்தும் கந்தையுடன்
கடல் இனிக்கும் வெயில் குளிரும்
என்று இயற்கைக்கு முரணாய்
எதிர் பார்ப்பதுபோல்
உனக்கு முரணாய் நான் உன்
காதலனாக எண்ணுவது
பிழையா இல்லை பாவமா ??
Leave a Comment

உன்னாலே உன்னாலே !

உன்
சுட்டு விழி பார்வையிலே
சோகம் சுகமாகிறது !
சொக்கும் சிரிப்பாலே
சொர்க்கம் வீடாகிறது !
நடக்கும் நடையிலே
உலகம் தள்ளாடும்,
சிந்தும் முத்தத்தில்
சிந்தை சீராகும்;
சிகரம் போலே
இன்பம் மேலோங்கும்
ஆம்!
வள்ளுவன் சொன்னது
உண்மையடி …..
உன் சொல் கேளாதவர் …
வாழ்ந்தென்ன வளர்ந்தென்ன …

Leave a Comment