சொல்ல முடிந்தும் சொல்லாமல்,
சொப்பணத்தில் மட்டும் உன்னை சொந்தம் கொண்டாடி…
சொர்க்கம் இதுவோ ? இல்லை வாழ்வின்
நரகம் இதுவோ ? என்று
என்னை நானே வினவி,
விடை தேடி நானும்…..
நடையும் தெரியாமல்
நிலையும் புரியாமல்
உணவிருந்தும் பட்டினியாய்
உடையிருந்தும் கந்தையுடன்
கடல் இனிக்கும் வெயில் குளிரும்
என்று இயற்கைக்கு முரணாய்
எதிர் பார்ப்பதுபோல்
உனக்கு முரணாய் நான் உன்
காதலனாக எண்ணுவது
பிழையா இல்லை பாவமா ??
Leave a Comment 
